Thursday, July 15, 2010

தோழர் ம.செந்தமிழன்

தோழர் ம.செந்தமிழன், தமிழ்த் தேசியம், இயற்கை வேளாண்மை, ஈழ விடுதலை, சமூகவியல் என பல்வேறு தளங்களில் ஆய்வுகளையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருபவர்.

1990களில் தன் பள்ளிப் பருவத்திலிருந்து தமிழக மாணவர் முன்னனி அமைப்பின் தீவிர செயற்பாட்டாளராக இருந்து, தமிழ்த் தேசிய ஆக்கத் திட்ட செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். 1995ஆம் ஆண்டு பார்ப்பன செயலலிதா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டிற்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்டதன் காரணமாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டவர். பல்வேறு அச்சு ஊடகங்களில் பணிபுரிந்தவர்.
ஆடு மேய்ப்பவர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் ‘ஆடோடிகள்’, மறைக்கப்பட்ட தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளை கண்டறிந்து சொல்லும் ‘பேசாமொழி’இ நான்காம் ஈழப் போரில் காங்கிரஸ் அரசின் உதவிகளை ஆதாரங்களுடன் விளக்கி தமிழகமெங்கும் இளந்தமிழர் இயக்கத்தினரால் பரப்புரை செய்யப்பட்ட ‘தீர்ப்பு எழுதுங்கள்’ உள்ளிட்ட ஆவணப்படங்களை இயக்கியவர்.

தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் அதன்வழியே தமிழ்நாட்டு பெண்களின் உளவியலை விளக்கும் ‘டிராகுலாவின் காதலிகள்;’, மனித சமூகத்தின் வளர்ச்சிப் படிநிலைகளையும், இன்றைய உலகமயமாதல் சூழலில் சமூகவியலையும், விளக்கிக் கூறும் ‘நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்;’ உள்ளிட்ட ஆய்வு நூல்களை எழுதியவர். ‘சிங்களத்தின் இறுதிப்போர்’, ‘வீழவில்லை விடுதலைப்புலிகள்’ உள்ளிட்ட ஈழவிடுதலைக் குறித்தான குறுநூல்களையும் எழுதியுள்ளார்.

தற்போது, திராவிடம் என்பது தென்னாட்டுப் பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லே என்பதனை விளக்கியும், ஆரியத்தின் ஒரு பிரிவே திராவிடம் என்பதனை வலியுறுத்தியும் ‘அலர்’ என்ற ஆய்வு நூலை எழுதி வருகிறார். தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் தொடர்ச்சியாக கட்டுரைகள் எழுதிவருகின்றார்.

தற்போது, இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினராக உள்ள இவர், தஞ்சையில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார்.

அவருடைய எழுத்துகள் இத்தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment